February 08, 2016

3 கவிதைகள்

காற்றில் அளைகிற கைகளை
இறுகப் பற்றிக் கொள்வதற்காகவேனும்
எதிர்ப்படு.

எட்டிய தூரம் வரை
பார்வை
அதைத் தாண்டிய எல்லைக்கு
மனக் குதிரை
அகப்படாமல்
வித்தை காட்டும் நீ.

ஒரு வார்த்தையில்
மடங்குகிறாய்
ஒரு பார்வையில்
திமிறுகிறாய்
புலன்களின் விசாரணையில்
எப்போதும் நீ.

3 comments:

ப்ராப்தம் said...

கவிதை நச்சுனு மனதை வருடும் விதமாக அழகா இருக்கு. பகிர்வுக்கு நன்றி..

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை.

//அதைத் தாண்டிய எல்லைக்கு மனக் குதிரை//

சூப்பர் !

கே. பி. ஜனா... said...

நச் கவிதைகள்..